என்னைப் பற்றி

எனது படம்
121, அண்ணாநகர், தெரு.4, பொன்னம்மாபேட்டை, சேலம்.636001. அலைபேசி எண் - 98426 82566 & 90924 53376

செவ்வாய், 8 அக்டோபர், 2013

கேள்வியும் பதிலும்


கேள்வி : இராகுகாலம். எமகண்டம் நேரங்களில் விசேட நிகழ்ச்சிகளைத் தொடங்கக் கூடாது என்கிறார்களே? அதைப்பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

பூமியானது ஒவ்வொரு நாளும் தன்னைத்தானே சுற்றி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும், அவ்வாறு சுற்றிவரும் போது ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வடதிசையை நோக்கிச் தாழ்கிறது அவ்வாறு சுழலலும் போது மனிதனின் எண்ண அலைகள் அத்திசையை நோக்கி ஈர்க்கப்படும், அந்த நேரத்தில் மனித எண்ணம் சற்று மந்தமாகச் செயல்படும், சுறுசுறுப்பு சற்று குறைவாகவே இருக்கும், அந்தக் குறிப்பிட்ட காலங்கள் தான் இராகுகாலம். எமகண்டம் என அழைக்கப்படுகின்றன, ஆகவே அந்த நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் நாம் சுப விசேட நிகழ்ச்சிகளில் ஈடுபடலாம்

கேள்வி : நாம் நெற்றியில் விபூதி. குங்குமம். சந்தனம் போன்றவற்றை இட்டுக் கொள்வது எதற்காக?

பொதுவாக மனிதனுடைய என்ண அலைகள் வலிமை வாய்ந்தவை, மற்றவர்கள் எண்ணம் (நல்லதாகவும். கெட்டதாவும்) நிச்சயம் நம்மைத் தாக்கும், அவ்வாறு தாக்கும்போது முதலில் அது நம்முடைய புருவ மத்தியின் வழியே சென்று நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது, அதைத் தவிர்க்கவும். வலுவான எண்ணங்களுக்காகவும் நாம் விபூதி. குங்குமம். சந்தனத்தை அவரவர் சம்பிரதாயப்படி இட்டுக்கொள்ளுதல் அவசியம், இதனால் முகம் பொலிவுபெறுகிறது

கேள்வி : ஆலயங்களில் உயிர்பலியிடுதலை இந்தக் கால கட்டத்திலும் நிறையப்பேர் செய்கிறார்களே. இது எதனால்?

சாக்த மதத்தில் தாந்திரீக வழிபாடுகளில் மந்திரம். யந்திரம். தந்திரம் ஆகியவற்றைப் பிரதிஷடை செய்யும் போது  உயிர் பலியிட வேண்டும் என்றும் காலமுக மதப் பிரிவில் பைரவர் வழிபாட்டில் உயிர்பலியிடுவதைப் பற்றியும் பல குறிப்புகள் உள்ளன, வேதகாலத்தில் செய்யப்பட்ட பெருவாரியான யாகங்களில் பசு. குதிரை. ஆடு. மனிதன் போன்றவற்றைப் பலியிடப் பட்டதற்கான ஆதாரம் உள்ளது, வேதங்களில் குதிரை. மாமிசப் படையலைப் பற்றியும். மதுபானப் படையலைப் பற்றியும் பல குறிப்புகள் உள்ள்ன, எனவே உயிர் பலியிடுதல் என்பது பழைமையான விஷயம்இக்காலத்தில் வைதிகச்சடங்குகளில் உயிர்ப்பலி இடுவது முற்றிலும் குறைந்து விட்டது அது பாவம் என்ற ஜீவகாரூண்ய எண்ணமும் வளர்ந்து விட்டது   அதற்கு மாற்றாக பூசனிக்காய். எலுமிச்சை. அவல் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

கேள்வி : இறைவனை வீட்டில் வழிபடுவதற்கும். ஆலயத்தில் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பொதுவான வீட்டு சாப்பாட்டிற்கும் ஹோட்டல் சாப்பாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுதான் இதுவும், வீட்டு சாப்பாடுதான் கோவில் வழிபாடு, ஹோட்டல் சாப்பாடுதான் வீட்டு வழிபாடு, பொதுவாக வீட்டு சாப்பாட்டில் தான் ருசியும். சத்தும் அதிகளவில் இருக்கும், ஆனால் ஹோட்டல் சாப்பாட்டில் தரம் குறைவாகவே இருக்கும்,
கோவிலில் தீயவர்கள் நுழைந்தால் கூட நாம் கோவிலில் நுழைந்துவிட்டோம் என்று நினைத்து இறைவாஎன்னைக் காப்பாற்று என்று பிரார்த்தனை புரிவார்கள், நல்லவர்கள் நுழைந்தால் உலக அமைதி. நன்மைக்காக பிரார்த்திப்பார்கள். அதே சமயம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டிலிருந்தே வழிபடலாம், ஹோட்டல் சாப்பாடு போன்றதுதான் இறைவழிபாடு என கூறக்காரணம் வீட்டில் பல பிரச்சினைகளால் மனம் அலைகழிக்கப்படும், சிந்தனை இறைவன்பால் இருக்காது என்பது சர்வ நிச்சயம், ஆகவே நாம் அனைவரும் கோவில்களுக்கு சென்று அங்கமர்ந்து பக்தர்களின் துயரைப் போக்கும்.

கேள்வி : பூஜை அறையில் சுவாமி படங்களுடன் இறந்த மூதாதையர் படங்களை வைக்கலாமா?
                                                                                             
வைக்கக்கூடாது, தாய். தந்தை மீது அதிகமான. பாசமும். பற்றும் கொண்டவர்கள் இதைப்போன்ற முறைகளைச் செய்கிறார்கள், அவர்களுக்கு இது திருப்தி சந்தோஷம் தந்தாலும் சாஸ்திரப்படி இறைவிக்ரகங்களுக்குச் சமமாக வேறெந்த விக்ரகத்தையும் படத்தையும் வைக்கக் கூடாது,
இறைவனுக்குக் காட்டப்படும் தீப ஆராதனைகளும் அந்தப் படத்திற்குக் காட்டக் கூடாது, அந்தப் படங்களுக்கு தனியாக வேண்டுமானால் காட்டலாம், இவ்வாறு செய்தால் அவரது குடும்பத்தில் வளர்ச்சியும். வாழ்வில் வளத்தையும் தரும், பித்ரு காரியங்களை முறைப்படி செய்ய இயலாதவர்கள் அதற்கான வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் இவ்வாறு செய்வது ஓரளவிற்கு நன்மையைத் தரும்,


மஹாளயபட்ச அமாவாசை
புரட்டாசி மாத மஹாளயபட்ச அமாவாசை யன்று, சர்வகோடி லோகங்களிலுமுள்ள மகரிஷி கள் உட்பட அனைத்து ஜீவன்களும் தேவதைகளும் பூலோகத்திற்கு வந்து, புண்ணிய நதிக்கரைகளிலும் சமுத்திரங்களிலும் மற்றும் காசி, ராமேஸ்வரம், கயை, அலகாபாத் திரிவேணி சங்கமம், கும்ப கோணம் சக்கரப்படித்துறை போன்ற புனித தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர். வசு, ருத்ர, ஆதித்ய, பித்ரு தேவர்களே இந்நாளில் தர்ப்பணம் இடுகின்றனர் என்றால், மஹாளய பட்ச மகிமை சொல்லவும் அரிதன்றோ?
நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக் கின்றனர்.
பொதுவாக அனைத்து அமாவாசை திதிகளிலும் ஸ்ரீ அக்னி பகவானின் பத்தினியான ஸ்வதா தேவியானவள், நாம் இடுகின்ற எள்ளையும் நீரையும் வாங்கி வானத்தில் எங்கெங்கோ உள்ள நீத்தார் உலகங்களுக்கு எடுத்துச் செல்கிறாள். ஆனால், மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய- சந்திர உலகிற்கு வந்துபோவதால் ஸ்வதா தேவியால் அனைத்து உறவினர்களையும் அங்கு சந்திக்க முடிகிறது. எனவே மஹாளய பட்ச அமாவாசையில் நாம் சமர்ப்பிக்கும் எள், நீர் ஆகியவற்றை இறந்த நமது உறவினர்களி டையே உடனடியாக அவள் சேர்த்துவிடுகி றாள். இறந்த உறவினர்கள் மீண்டும் எந்தப் பிறவி எடுத்தாலும், அந்தப் பிறவியில் அவர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற காரியத்துக்குத் தேவையான உதவியை, காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு "மாற்றுப் பண்டங் களாக உருவாக்கித் தந்துவிடுகிறாள் ஸ்வதா தேவி.
புரட்டாசி மாத அமாவாசைக்கு முன்பாக கிருஷ்ணபட்சம் பிரதமையிலிருந்து அமாவாசை வரை பதினைந்து திதிகளிலும் தினசரி தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானது.
பித்ரு தர்ப்பணம் என்பது ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றாகும். நமது மூதாதையர்களுக்குரிய அமாவாசை, கிரகணகால, மாதப்பிறப்புத் தர்ப்பணங்களை முறையாகச் செய்யாமையால்தான் உலகில் பல துன்பங்கள் உண்டாகின்றன. எனவே இதுகாறும் செய்யாமல் விட்ட தர்ப்பணங்களுக்கு ஓரளவு பிராயச் சித்தமாக மஹாளயபட்சத்தின் பதினைந்து நாட்களிலும் தினந்தோறும் தர்ப்பணம் செய்வது அவசியம். மேலும் அந்நாட்களில் அன்னதானம் செய்வது வெகு விசேஷமானது! அப்படிச் செய்வது, தர்ப்பண பலன்களைப் பன்மடங்காகப் பெற்றுத் தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை! இறந்துபோன மூதாதையர்களின் நினைவாக நாம் அளிக்கும் உணவானது, (இந்த மஹாளயபட்ச காலத்தில்) உடனே அவர்களைச் சென்று அடைவதாய் ஐதீகம்.
நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்த தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டு மின்றி, நமது வம்சாவளியினரான நமக்குத்தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே மஹாளயபட்சத் திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்கு கிறது.
பொதுவாக வலது ஆள்காட்டி (குரு விரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிர விரல்) இடையிலுள்ள "பித்ரு- பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள பித்ரு லோகத்தை அடைகின் றது. சாதாரணமாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே இந்த "பித்ரு லோக- அந்தர ஆகர்ஷண சக்தியின் தெய்வீகத் தன்மையாகும். மஹாளயபட்ச அமாவாசையன்று இச்சக்தி யானது மிகவும் அபரிமிதமாகப் பெருகுகின்றது.
பித்ருக்களுக்கு தர்ப்பணமிடும்போது பசுந்தயிர் கொண்டு தர்ப்பணமிடுவது வெகு விசேஷமானது. மேலும் அவர்களுக்கு ஆத்ம திருப்தியளிப்பதாய் கருதப்படுவது புடலங் காயாகும். (பித்ரு லோகத்திலுள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே; இதன் நிழலில்தான் பித்ரு- தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.)
ஆக, அதியற்புதமான- தெய்வீக ஆற்றல் களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து, பல்லாயிரக்கணக்கான நம் கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மஹாளய பட்ச தர்ப்பண தான- தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காண்போமாக!


கோயில் பிரகாரம் .
பெரிய சிவாலயங்களில் சுவாமியைச் சுற்றிவர பிரகாரம் இருக்கும் . அவை மூன்று , ஐந்து , ஏழு பிரகாரங்கள் என்ற அமைப்பில் இருப்பது விசேஷம் .

மூன்று பிரகாரங்கள் அன்னமயம் , பிராணமயம் , மனோமயம் என்ற மூன்று கோஷங்கலைக் குறிக்கும் . ஐந்து பிரகாரமாயின் இவற்றுடன் விஞ்ஞான , ஆனந்த மயகோஷங்கள் கூடும் .
ஏழு ஸ்தூல சூட்சுமத்தை குறிப்பவை .

சில கோயில்களில் ஒரே ஒரு பிரகாரம் இருக்கும் . வெளிப்பிரகாரம் இருப்பதும் உண்டு . உட்பிரகாரத்தை வலம் வருவதை விட வெளிப் பிரகாரத்தை வலம் வருவது மூன்று மடங்கு புண்ணிய பலனை தரக்கூடியதாகும் .
பிரதட்சணம் செய்யும் போது மெல்ல மெல்ல நடக்க வேண்டும் . நிறைமாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணெய் குடத்தை , கால்களில் விலங்கு உடையவளாய் இருந்து சுமந்து நடந்தால் எப்படி அடிமேல் அடி எடுத்து வைப்பாளோ அதுபோல் நடக்க வேண்டும் என்பது பிரதட்சணவிதி.

காலை பிரதட்சணம் நோயை அகற்றும் ;
 பகல் பிரதட்சணம் விரும்பியதைக் கொடுக்கும் ;
மாலைப் பிரதட்சணம் பாவங்களை அகற்றும் ; அர்த்தஜாமப் பிரதட்சணம் போகசித்தி கொடுப்பதுடன் , செல்வம் வளம் தரும் . அங்கப் பிரதட்சணம் செய்தால் தீய வினைகளையெல்லாம் நீங்கப்பெற்று முக்தி கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம் .
 ஆண்கள் அங்கப்பிரதட்சணமும் , பெண்கள் அடிப்பிரதட்சணமும் செய்யலாம் .

பிரதட்சணம்
பின்வரும் தெய்வங்களுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் பிரதட்சணம் என்று நூல்கள் சொல்கின்றன .
விநாயகருக்கு ஒரு பிரதட்சணம் .
சிவனுக்கு மூன்று பிரதட்சணம் .
முருகனுக்கு ஆறு பிரதட்சணம் .
விஷ்ணுவுக்கும் , அம்பாளுக்கும் நான்கு

நவக்கிரகங்களுக்கு ஒன்பது .


108 தடவை உச்சரிப்பதும், ஜபம் செய்வதும் ஏன்?
கடவுளின் திருநாமத்தை 108 தடவை உச்சரிப்பதும், ஜபம் செய்வதும் ஏன்?  அது ஏன் வேறு எண்ணாக இருக்கக் கூடாது?
சமய நூல்கள் - சமயத்தின் தத்துவங்கள் 3, 5, 7, 9 என, ஒடுக்கியும் விரித்தும் கூறுகின்றன. எனவே, அதில் உயர்ந்தது, பாக்கியம் தரும் செவ்வாயின் எண் 9. சக்தியின் எண் 9. ஒலி, ஒளி பகுப்பு முறையும் ஒன்பதாகும். ஜபவிதி முறையும் அவ்வாறே உள்ளதால், ஜபமாலை இலக்கணம் அதற்கேற்பவே கூறப்பட்டுள்ளது.

ஒரு நட்சத்திரத்தை நான்கு பாதங்களாக ஆக்கினால், ஒரு ராசிக்கு 9 பாதங்கள். மொத்தம் 9 x12 = 108 பாதங்கள்.
108 தடவை முடியவில்லை-யெனில், கூட்டு எண் ஒன்பது வருவதாகச் செய்யலாம். அதாவது 18, 27, 36... என்று. பல விசேஷ அம்சங்கள் கொண்டதாக இவை இருப்பதினால்தான், நமது முன்னோர்கள் காலம் காலமாக இவற்றை அனுஷ்டானம் செய்து வந்துள்ளார்கள். நாமும் இவற்றை அனுதினமும் பயன்படுத்தி உயர்ந்த பலன்களை அடையலாமே!

அஷ்டமி, நவமி நாட்களில் நல்ல காரியங்களைத் தொடங்கக் கூடாது என்கிறார்களே! இது எதனால்? அன்றைய தினத்தில் பயணம் செய்யலாமா?

சில காலம், சில பணிகளுக்கே உரியதாகிறது. மிக உயர்ந்தவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபடுவது நமது நெறி. அவ்வாறே, தெய்வங்களுக்கு மிக உகந்த திதிகளில் நமது சுப காரியங்களை நாம் தியாகம் செய்தல் நல்லது. சமய நூல்கள் விதித்தமையால், மாறாது பின்பற்றுதல் முறை.


கடவுளர்களின் படங்களையோ விக்கிரகங்களையோ வெறும் பொருளாக நினைக்காமல், அவற்றினுள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து அறிந்து, ஆனந்தம் பெற வேண்டும். இப்போது பல விக்கிரகங்களையும், கடவுளர்களின் படங்களையும் வீட்டில் வைத்துக்கொண்டிருப்பது ஒரு ஃபேஷன் ஆகி வருகிறது. இது மிகத் தவறு.  நிறையவோ, குறைவாகவோ எவ்வளவு இருந்தாலும் அவற்றை நல்ல முறையில் ஆராதித்தோமானால், அங்கு கடவுளர்களின் ஸாந்நித்தியம் நமக்கு அருளை அள்ளிக் கொடுக்கும்.
தங்க நகை அணிவது அவசியமா

ஆபரண மாலை என்று ஒரு நூலில் சொல்லியிருக்கு. அதில் உடலில் எந்தெந்த பாகங்களில் என்னென்ன ஆபரணங்கள் அணிய வேண்டும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.
காதுக்கு மட்டுமே 6 வகையான ஆபரணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. மேல் காது, கீழ் காது, இடைக்காது இதிலெல்லாம் என்னென்ன அணிய வேண்டும் என்று கூட சொல்லப்பட்டிருக்கிறது. காதில் அணியக் கூடியதெல்லாம் அக்குபஞ்சர் முறையில் உடல் ஆரோக்கியத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் உண்டு.
ஆண்களுக்கும் மெட்டி அணிதல் உண்டு. வலது காலினுடைய பெரு விரலிற்கு அருகில் உள்ள இரண்டாம் விரலிலும், 3வது விரலிலும் திருமணம் முடிந்த ஆண்கள் மெட்டி அணிய வேண்டும்.
அணிகலன்கள் மூலமாக உடலினுடைய இரத்த ஓட்டங்கள், எண்ண ஓட்டங்கள் இதெல்லாம் நெறிப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது ஆபரணங்களை தங்கத்தில் அணியும் போது மேலும் ஒரு புனிதத் தன்மை கிடைக்கிறது.
தங்கம் சாஸ்திரத்தில் லட்சுமியோட உலோகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் கால்களிலெல்லாம் தங்கம் அணியக்கூடாது. மெட்டியெல்லாம் வெள்ளியில்தான் செய்ய வேண்டும், கொலுசும் வெள்ளியில்தான் அணிய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் லட்சுமியின் அடையாளமாகச் சொல்லப்பட்டிருப்பதால் இடைப்பகுதிக்கு கீழ் தங்கத்தை கொண்டு போகக் கூடாது. இடைப்பகுதி வரைக்கும் தங்க ஆபரணங்கள் அணியலாம்.
தங்கத்திற்கு உறுதித்தன்மை அதிகம், அதேபோல தங்கத்திற்கு மனோபலத்தை தரக்கூடிய சக்தியும் உண்டு. தங்கம் தன்னம்பிக்கை தரக்கூடிய உலோகம். அதனால்தான் ஒரு சின்ன மோதிரமாவது விரலில் இருந்தால் நல்லது என்று சொல்வார்கள். அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் தங்கத்தில் தாலியைச் செய்தார்கள். மற்ற உலோகங்களில் தாலி செய்யும் பழக்கம் இல்லவே இல்லை.
வெள்ளி வந்து எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடிய உணர்வைத் தரக்கூடியது.
காப்பர் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் ஒரு பிடிவாதத்தைத் தரக்கூடிய உலோகம்.
இது ஆண்களுக்கும் பொருந்தும்..

நீண்ட காலம் வாழ்ந்து மறைந்தவருக்கு செய்ய வேண்டியதென்ன

கேள்வி: ஒரு குடும்பத்தின் தாய் அல்லது தந்தை நீண்ட காலம் வாழ்ந்து மறைந்த நிலையில், அடுத்த ஓராண்டிற்கு அவ்வாறு மறைந்தவருக்கு செய்ய வேண்டியது என்ன?

மறைந்த அந்த பெரியவர்கள், வாழும் போது என்ன செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்களோ அதனை உடனடியாக செய்திடல் வேண்டும்.
அவர்கள் நீண்ட காலமாக செய்ய நினைத்தது செய்யப்படாமல் ஏதேனும் இருந்தால், அவர்கள் மறைந்த ஒரு மாத காலத்திற்குப் பிறகு அதனை நிறைவேற்றிட வேண்டும்.
குடும்ப உறுப்பினருக்குத் திருமணம், குல தெய்வத்திற்கு படையலிட்டு கும்பிடுதல், குறிப்பிட்ட கோயிலிற்குச் சென்று பரிகார பூசைகள் ஏதேனும் இருப்பின் செய்தல், மறைந்தவர்கள் நேர்ந்துகொண்ட பிரார்தனைகளை நிறைவேற்றுதல் போன்றவற்றை அவர்கள் மறைந்த ஒரு மாத காலத்திற்குப் பிறகு செய்து முடிக்கலாம்.
எதைச் செய்தாலும் உற்றார் உறவினர் அனைவரும் கலந்துகொள்ள செய்து முடிக்க வேண்டும், இது மிக முக்கியமானது. குடும்பமாக தனித்து செய்திடல் கூடாது.

கேள்வி: குல தெய்வத்திற்கு படையலிட்டு வழிபாடு செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்திருப்பின் அதனை இந்த ஓராண்டிற்குள் நிறைவேற்றலாமா? ஓராண்டுக் காலம் துக்கத்திற்குப் பிறகுதான் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே?

நீண்ட காலம் வாழ்ந்து மறைந்தவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். அவர்களின் ஆத்மா வாழ்த்திக் கொண்டிருக்கும். எனவே, ஒரு மாத கால துக்கம் போதுமானது.
நான் ஏற்கனவே கூறியபடி, குடும்பத்தினர் மட்டும் தனித்து குல தெய்வ வழிபாடு செய்யக் கூடாது, உற்றார் உறவினர் புடை சூழ அதனை நிறைவேற்றிடல் வேண்டும்.

கேள்வி : ஆன்மீக வாழ்வில் (நிலையயில்) உயர்வடைய சிவனை வழிபடலாமா? விஷ்ணுவை வழிபடலாமா?

சிவனும். விஷ்ணுவும் தனித்தனியாகக் கூறப்பட்டிருந்தாலும் இறைவன் ஒருவன் தானே என்ற எண்ண ஓட்டத்தில் நீங்கள் இக்கேள்வியைக் கேட்டிருந்தால் அதை முற்றிலும் மாற்றிக் கொள்ளுங்கள், ஹரியும் சிவனும் ஒன்றுதான், இதில் எனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை, ஆனால் ஹரியகா இருக்கும்போது ஒரு செயலலையும். சிவனாக இருக்கும்போது ஒரு செயலையும் செய்கின்றான், இது எப்படி என்றால் ஒருவன் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும்போது ஒரு மாதிரியாகவும் மகன் ஸ்தானத்தில் இருக்கும்போது ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்கிறான் அல்லவா? நீங்கள் கேட்டிருப்பது ஆன்மீக வாழ்வில் முன்னேற யாரை வழிபடுவது என்பது தானே? எம்பெருமான் நாராயணனை வழிபடும் போது இவ்வுலக வாழ்க்கையில் துன்பங்களைக் களைகிறான், பரமேஸ்வரனை வழிபட்டாலோ பரவுலகத்திலும் ஏற்படும் துன்பத்தைக் களைகிறான், என்னைப் பொருத்தவரையில் தியானம். யோகம் ஆகியவற்றுக்கெல்லாம் சிவனே மூர்த்தி என்று கருதுகிறேன், வைணவ. சைவ பேதங்கள் எல்லாம் பக்குவமில்லாத மனிதர்களுக்குத்தான், ஏனென்றால் இராமன் சிவபூஜை செய்கிறார்; சிவன் இராம நாமம் ஜெபிக்கிறார்

கேள்வி  அமாவாசை திதியில் பிறந்த குழந்தை திருடனாகும் என்பது உண்மையா?

ஜோதிடத் துறையில் அமாவாசை தினத்தைப்   பற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகிறது.  அமாவாசை நாளை சுபநாள் என்று ஒரு சாராரும் அசுப நாள் என்று மற்றொரு சாராரும் சொல்லி வருகிறார்கள்.  சுபநாள் என்று வாதிடுபவர்கள் அது வளர்ப்பிறையின் துவக்கம், அதனால் அன்று செய்யும் காயங்கள் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்கிறார்கள்.
அசுப நாள் என்று சொல்பவர்கள் அன்றைய தினம் சந்திரன் முழுமையாக பூமியால் மறைக்கப்பட்டு விடுகிறது.  பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள ஆகர்ஷண தொடர்பு அமாவாசை நேரத்தில் இருப்பது இல்லை.  அதே நேரம் நேரத்தை தேய்பிறையின் முடிவு என்று சொல்லலாமே தவிர வளர்பிறையின் ஆரம்பம் என்று எந்த  நிலையிலும் கருத முடியாது.  அமாவாசைக்கு அடுத்த நாள் தான் வளர்பிறை துவங்குகிறது.  எனவே அமாவாசை அசுப தினமே என்று வாதிடுகிறார்கள்.
இந்த விஷயத்தில் முக்கியமாகக் கவனத்தல் எடுத்தக் கொள்ளக் கூடிய ஒரு தகவல் இருக்கிறது.  அது அமாவாசை அன்று பூமி சந்திரனை முழுவதுமாக மறைத்து வடுகிறது.  சந்திர ஆகர்ஷணம் சரியான முறையில் பூமியில் கிடைப்பது இல்லை என்பது தான்.  சந்திரனுடைய சக்தி சரியாக இல்லாதபோது பிறக்கும் குழந்தைகள் தாயாரிடம் இருந்து போதிய அரவணைப்பைப் பெற முடியாது அல்லது குழந்தை தாயிடம் அவ்வளவாக ஒட்டாது என்பது சாஸ்திர விதி மட்டுமல்ல அனுபவ உண்மையுமாகும்.
தாயின் அன்பைப் பெறாத அல்லது தாய் மீது அன்பு வைக்காத குழந்தைகளைச் சிறந்தவர்கள் என்று கூறுவது மிகவும் சிரமமாகும்.  இத்தகைய குழந்தைகளிடம் நல்லவை அல்லாத இயல்பு சற்று அதிகமாக இருக்கும்.
பொருளைத் திருடி தண்டனை பெற்றவன் தான் திருடன் என்று கூறமுடியாது.  திருட நினைத்தாலே அது திருட்டுத் தனம் தான்.  அதனால் அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகளிடம் பொருளைக் கவரும் இயல்பு சற்று அதிகமாக இருப்பது உண்மைதான்.

கேள்வி : திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?

திருமணமானவர்கள் என்று உலகத்தார்க்குத் தெரிவிப்பதற்கு மட்டுமன்றி கால் கட்டை விரலுக்கு அடுத்ததாக உள்ள விரலில் உள்ள நரம்பு மூளையோடு இணைந்து பாலுணர்வைத் தூண்டுகிறது என்பதற்காகவும் அணியப்படுகிறது, அந்த நரம்பு வெள்ளி உலோகத்தால் தூண்டப்படுமத் போது கணவன் - மனைவி இடையேயான தாம்பத்ய உறவை நெறிப்படுத்தி அவர்களைத் திருப்தியுறச் செய்கிறது.

கேள்வி : திருமண வைபத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் என்ன?

முன்பின் அறிமுகமில்லாத இரண்டு ஜீவன்கள் இணைவதுதான் உண்மையான திருமணம், இத்திருமணத்தை (1) இறைவன் சாட்சியாகவும் (2) பெரியவர்கள் சாட்சியாகவும் (3) தன்னுடைய மனசாட்சியைக் கொண்டும் ஓர் ஆண் மகன் தாலியைக் கட்டுகிறான், இந்த மூன்று சாட்சிகளை மூன்று முடிச்சுகளாக உருவகப்படுத்துவதே தாலி கட்டுவதன் அர்த்தமாகும்.


காலசர்ப தோஷம் தீராத துயரமா...?

பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஜனன லக்கினம் ஜனன ராசி உட்பட அனைத்து கிரகங்களும் ராகு கேதுகளுக்கு நடுவில் அகப்பட்டு கொண்டால் அந்த ஜாதகத்தை கால சர்ப தோஷ ஜாதகம் என்கிறார்கள் இந்த அமைப்பில் மற்ற கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றியிருந்தாலும் கூட அவைகள் நன்மையை தராது மேலும் அந்த கிரகங்களின் உடுமஹா தசை தசா புத்தி நடக்கும் காலம் கூட கேடுடையதாகவே அமையும் என்று பரவலாக நம்பப் படுகிறது

ஆனால் இந்த நம்பிக்கை ஜோதிட ஆய்வு படியும் அனுபவப் படியும் முழுமையான உண்மை இல்லை என்பதே எனது கருத்தாகும். ஜோதிட நூல்கள் ஒருவனின் ஜாதகத்தில் கால சர்ப தோஷம் அமைந்திருந்தால் அவன் முப்பத்திரண்டு வயது வரையில் பல சோதனைகளையும் தோல்விகளையும் மாறி மாறி சந்திப்பான் அதன் பிறகு அந்த தோஷம் தானாக நிவர்தியாகி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும் என்று சொல்கின்றன

இந்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது அதனால் இவைகள் தான் உண்மை மற்றவைகள் எதற்கும் உதவாதது என்று நான் சொல்ல வரவில்லை எந்த விசயமாக இருந்தாலும் அது புத்தகங்களில் எழுதப்பட்டு இருப்பதனால் மட்டும் உணமையாகி விடாது அந்த கருத்துக்கள் நமது வாழ்விலோ அல்லது நம்மை சார்ந்தவர்கள் வாழ்விலோ எந்த அளவு சரியாக நடந்துள்ளது என்பதை அனுபவத்தில் ஆராய வேண்டும்

கால சர்ப தோஷமுடைய நிறைய ஜாதகங்களை நான் ஆராய்ந்து இருக்கிறேன் அவர்கள் வாழ்க்கையையும் பல வருடமாக கவனித்தும் வருகிறேன் பழமையான நூல்கள் சொல்லுகிறப்படி சில காலங்கள் அவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பது என்னவோ உண்மை தான் ஆனால் மீதமுள்ள காலத்தில் பல வெற்றிகளையும் சந்தோசங்களையும் அவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்

கடவுளின் படைப்பில் துன்பம் மட்டுமே ஒருவனை தொடர்ச்சியாக தொடர்வது இல்லை பல நேரங்களில் வெற்றியும் இன்பமும் சந்திக்க வேண்டிய நிலையும் வருகிறது அதே போலவே இன்பம் மட்டுமே ஒருவனது முழு வாழ்வாக ஆகி விடாது

இங்கிலாந்து மகாராணி மனதிலும் சோகம் உண்டு தெருவோரத்தில் வாழ்பவனும் ஆனந்தம் அடைவதுண்டு எனவே தேவை இல்லாமல் கால சர்ப தோஷத்தை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை அதற்காக வாழ்வை இழக்க வேண்டிய தேவையும் இல்லை


செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

அண்ட வெளியில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாகச் சொல்வது என்றால்

வியாழன் என்ற குரு கிரகம் நமது மூளையைக் கட்டுப்படுத்துகிறது. சுக்கிரன் மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும், வீணாவதற்கும் காரணமாக இருக்கிறது.

சனி நரம்பு மண்டலத்தையும்,

புதன் சுவாசத்தையும் கட்டுப் படுத்துகிறது. அதே போன்று

செவ்வாய் கிரகம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களையும் எலும்பு தாதுக்களையும் ஆட்சி செய்கிறது.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணைந்து குழந்தைகளைப் பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், சரியாக இராது.

இதுதான் செவ்வாய் தோஷத்தின் பாதிப்பே தவிர மற்றபடி மணமக்கள் பிரிந்து விடுவார்கள், இறந்து விடுவார்கள் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகளாகும். கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டும் செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்குத் தோஷம் இல்லாமல் இருந்தும் கூட அவர்கள் பல காலம் நல்லவிதத்தில் இணைபிரியாமல் குடும்பம் நடத்துவதைப் பார்த்திருக்கிறேன்.

பொதுவாக லக்னத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது தோஷம் என்று கருதப்படுகிறது. ஆனால் இது பொதுவான கணக்கே தவிர சரியான கணக்கு அல்ல. செவ்வாய் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்று இருந்தாலும் மகர ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும் கடக ராசியில் நீச்சம் பெற்று இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இது தவிர குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒன்று செவ்வாயுடன் கூட்டு சேர்ந்து இருந்தாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ அல்லது மேற்குறிப்பிட்ட கிரகங்கள் செவ்வாயைப் பார்த்தலோ செவ்வாய் தோஷம் கண்டிப்பாகக் கிடையாது. அதே நேரம் செவ்வாயின் நட்புக் திரகங்களான சூரியன், சந்திரன், குரு ஆகியவற்றின் ராசிகளான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்குச் செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் என்பதே கிடையாது. இந்தக் கணக்குகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஆயிரத்தில் ஒருவருக்குத் செவ்வாய் தோஷம் உண்டு. மற்றவர்கள் அதை நினைத்துப் பயப்படுவது வீண் கற்பனையாகும் ரத்த சம்மந்த பட்ட தோஷம் என்பதால் பரிகாரம் செய்வதால் எந்த பயனும் இல்லை..

அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா?

அக்னி நட்சத்திரம் பிறந்து விட்டால் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் காலம் காலமாக இருந்து வருகிறது. குறிப்பாகச் சொல்லுவ தென்றால் தென் தமிழகத்தை விட வட தமிழகத்தில் இத்தகைய நம்பிக்கை மிக அதிகாமவே இருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் பிரபலமான ஜோதிடர் ஒரவரை என்னிடம் வசைபாடித் தீர்த்தார். காரணம் என்னவென்று நான் கேட்டபோது கத்திரி நேரத்தில் என் மகன் திருமணத்திற்கு நாள் குறித்துத் தந்திருக்கிறார். இவரெல்லாம் ஒரு ஜோதிடரா என்று கூறி தனது வசைபாடலைத் தொடர ஆரம்பித்தார்.

எனக்கு அந்தப் பெரியவரைப் பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது. காரணம் இவரைப் போலவே எத்தனையோ பேர்கள் கத்திரி தோஷத்தைப் பற்றிய அறியாமையில் இருக்கிறார்கள். உண்மையில் கத்திரி தோஷத்தில் சுபகாரியம் செய்யக் கூடாதா? என்று கேட்டால் ஆம் செய்யக்கூடாது என்ற பதிலையும், கத்தரி தோஷம் என்பது உண்மையில் மக்கள் நினைப்பது போல் அக்கினி நட்சத்திர காலம் இல்லை என்றும் சொல்ல வேண்டும். அப்படியென்றால் கத்தரி தோஷம் என்றால் என்ன என்பது தானே உங்கள் கேள்வி.
எந்தவொரு சுபநிகழ்ச்சிக்கும் நேரம் குறிப்பது வழக்கம். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு லக்னம் ஆட்சியில் இருக்கும். அந்த லக்னத்திற்கு 2வது இடத்திலேயும், 12வது இடத்திலேயும் ராகு, கேது, சனி, செவ்வாய், போன்ற பாவ கிரகங்கள் அமர்ந் திருந்தால் அது தான் கத்தரி தோஷ காலம் எனப்படும்.

இந்தக் காலத்தில் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது. மற்றபடி ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21ஆம் நாளிலிருந்து வைகாசி மாதம் 14ம் நாள் வரை உள்ள அக்னி நட்டசத்திர காலத்தில் சுபகாயங்கள் செய்ய சாஸ்திரங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

சாதாரணமாக நீங்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்தாலே இக்குறிப்பிட்ட காலத்தில் பல சுபமுகூர்த்தங்கள் கணிக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம். இப்படிக் கணித்து எழுதிய ஜோதிட சாஸ்திரிகளுக்கு அடிப்படையான இத்தகைய விஷயங்கள் தெரியாமலா கணிதம் செய்கிறார்கள்; இல்லவே இல்லை.

அக்னி நட்சத்திர காலத்தில் கிணறு வெட்டுதல், தோட்டம் வைத்தல், மரம் நடுதல், விதை விதைத்தல் போன்ற சுபகாரியங்களைத் தவிர எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்யலாம். அதில் தவறில்லை.

கேள்வி : இந்து மதத்தில் மட்டும் ஜாதிப் பிரிவுகள் இருப்பது ஏன்?

பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள் என்று ஒருபோதும் கூறப்படவில்லை, பகவத் கீதையில் கருணைக் கடலான கண்ணபிரான் நான்கு வருணங்கள் பற்றிக் குறிப்பிடுகிறான், எதன் அடிப்படையில் என்றால்.

 உழைப்பால் நாட்டை உயர்த்தி அல்லும் பகலும்  சமுதாயத்தின் தேவைக்காகவும் ஓய்வென்பதே இல்லாமல் தன்னலம் மறந்து பிறர் நலம் காத்து அனைத்துச் செயல்களுக்கும் சூத்திரமாக இருப்பவனே - சூத்திரன்,

 மக்களின் தேவைக்காகவும் நாட்டின் பொருளாதார  மேம்பாட்டுக்காகவும் தன் உடல். பொருள். ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துப் பாடுபடுபவன் - வைசிகன்,

 தன்னை வருத்தி பிறருக்காக எதையும் செய்யக்கூடிய   தியாகபுத்தியும் தைரிய சிந்தனையும் யாரிடம் இருக்கிறதோ அவன் - சத்ரியன்,

 தான் கற்ற கல்வி ஞானத்தை பிறருக்குப் போதித்து அவ்வாறு போதித்த வண்ணம் வாழ்பவனே - பிராமணன்

    இவைதான் இந்துமதத்தில் கூறப்பட்டிருக்கும் ஜாதிப் பிரிவுகள்

இதில் சூத்திரனுக்குப் பிறப்பவன் பிராமணன் ஆகலாம்பிரம்மனணுக்கு பிறப்பவன் சூத்திரன்  ஆகலாம்என்ற வரிகள்படி முறையான முன்னேற்றத்தை அடையத் தடையாயிருக்கும் ஜாதிப்பிரிவுகள் சிறிது சிறிதாக மறைந்து வருகின்றன, ஒருமைப்பாடு இன்னும் வளரவேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.


                             குபேர புத்தர்


                                                                  ராசிக்கல்





யோகா முத்திரைகள்

யோகா முத்திரைகள்

முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.

பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.

நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன

1. கட்டைவிரல்      அக்னி
2. ஆள்காட்டி விரல்  வாயு
3. நடுவிரல்          ஆகாயம்
4. மோதிரவிரல்      பூமி
5. சுண்டுவிரல்               –   நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால்
உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை
1. “பத்மாசனம்போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.

2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.

4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.

6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில

1. பிராண முத்திரை மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.

2. ஞான முத்திரை இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி பிராண முத்திரையுடன் செய்தால்தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.

3. அபான முத்திரை நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.

4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.

5. வாயு முத்திரை ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் மூட்டு வலி ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.

6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.

7. சூரிய முத்திரை மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.

8. வருன முத்திரை சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.

9. லிங்க முத்திரை இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. சூன்ய முத்திரை இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

11. சங்க முத்திரை இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.

12. ஆகாய முத்திரை கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்கள் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.